கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?
1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.
5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.
11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.
12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.
18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.
19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்
22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது
திருக்கோவில் வழிபாடு என்பது நமக்குத் தேவையானதை இறைவனிடம் கேட்கும் இடமோ அல்லது நேரம் போக்குவதற்கு உரிய இடமோ, நண்பர்கள் சந்தித்துக் கொள்ள உகந்த இடமோ அல்ல... நம்மை கண்ணின் இமை போல் காத்து வரும் இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தும் ஒரு முக்கிய இடமே திருக்கோவிலாகும். நாம் இருந்த இடத்திலேயே இறைவனுக்கு நன்றி செலுத்த முடியும். ஆனால் ஏன் நாம் கோவிலுக்கு சென்று வழிபடுகிறோம். உதாரணமாக உங்களில் எத்தனை பேருக்கு உங்களது முந்தைய தலைமுறையை தெரிந்திருக்கும். நமது ஊரில் இருக்கும் கோவிலுக்குள் நுழையும்போது அங்கே மானசீகமாக நினைத்துப் பாருங்கள். இதே கோவிலுக்குள் இதே இடத்தின் வழியாக உங்கள் தாத்தாவின் தாத்தாவும், உங்கள் தாத்தாவின் அப்பாவும், உங்கள் தாத்தாவும், உங்கள் அப்பாவும், வந்து இறைவனை தொழுது சென்றிருக்கின்றனர். அதே வம்சா வழியாக நீங்களுமாக தற்போது இந்த கோவிலுக்குள் இறைவனிடம் வந்திருக்கிறீர்கள். மேலும் எத்தனை சித்தபுருஷர்களும், ஞானிகளும், ஆன்மீகப் பெரியோர்களும், உங்கள் மூதாதையர்களும் உலவிய இடங்களில் தற்போது நீங்களும் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள், இப்படி உங்கள் அறிவிற்கு புலப்படாத பல சூட்சுமங்கள் கோவில் வழிபாட்டில் மறைந்து கிடக்கின்றன. ஆகவே கோவிலுக்குள் முடிந்தவரை இறைவனை வணங்கும்போது, இறைவனைப் பற்றி மட்டும் நினையுங்கள். ஆலய பிரகாரம் சுற்றும் இறைவனோடு சேர்த்து உங்கள் மூதாதையர்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். பித்ருக்கள் திருப்தியானால் இறைவனும் தானாகவே மகிழ்ச்சி கொள்கிறார். ஒவ்வொரு வேளையும் இறைவன் - நாம் கேட்பதைத் தருவதை விட, நமக்குத் தேவையானதையே தருகிறார்,
1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.
2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.
5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.
6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.
7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.
11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.
12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.
14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.
18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.
19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்
22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.
25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது

No comments:
Post a Comment